Wednesday, August 6, 2008

குசேலன்... நானும் கொஞ்சம் சொல்றேன்..




வழக்கம் போல தமிழ் ரசிகர்கள் கிட்ட தனக்கு இருக்கற செல்வாக்க பணம் பண்ணலாம் னு நிரூபிக்க ரஜினி நடித்த படம். ரஜினி முகத்த காட்டினா படம் ஓடிடும் னு எண்ணி ஆரம்பிச்ச படம். நிச்சயம் இந்த படமும் 100 நாள் ஓடும்.. இல்ல இல்ல ஓட்ட படும்.. ரஜினி வெறியர்களால்.

இதை விட பாபா நல்லா இருந்ததாக எனக்கு ஒரு உணர்வு.

1) இசை: பாட்டு ரிலீஸ் ஆகி கேட்டப்ப, எந்த பாட்டும் மனச ஒட்டல. ஆனா வாசு மட்டும் இந்த பாட்டு எல்லாம் பெரிய ஹிட் னு சொல்லி கிட்டார். நல்லா இல்லாத பாட்டும் திரும்ப கேட்க கேட்க ஒரு அளவுக்கு மனச தொட்டுச்சு.

அதுல சிறந்தது: பேரின்ப பேச்சுக்காரன்.

2) நாயகிகள்: சோனா, மீனா, நயந்தாரா. சோனா பேர ஃபர்ஸ்ட் போட்டதுக்கும் ஒரு காரணம் இருக்கு. இவங்க கதா பாத்திரம் மட்டும் தான் கரெக்டா மாட்ச் ஆகி இருக்கு. மத்த எல்லாரும் செயற்கை. அதிலும் நயந்தாரா அம்ம்மம்மா. இந்த படத்துக்கு எதுக்குயா நாயகி? இந்த கதைக்கு எதுக்கய்யா டுயெட்? மடத்தனத்தின் உச்ச கட்டம். மார்க்கெட் வ்யால்யூ வேணும்னா படத்துல என்ன வேனாளும் னு பண்ணலாம் னு அர்த்தமா என்ன? ஏழை பொண்ணு பாத்திரம் கு கொஞ்சமாவது மாட்ச் ஆனாங்களா மீனா ஆன்ட்டி? இதுல வேற மலையாளம் ல பாத்துட்டு ரஜினி அம்மணி கு சிபாரிசு பண்ணாராம். ஏண்டா இப்படி கொள்ளுறீங்க.

3) நகைச்சுவை: வடிவேலு நல்லாதான ஆரம்பிச்சார் படம் ஆரம்பிகரப்ப. போக போக அவரு மட்டும் அழாம நம்மலயும் அழ வசிட்டார். படம் முழுக்க பயங்கர ஜால்ரா. சந்தனம், லிவிந்க்ஸ்டண்(அப்பா எவளோ கஸ்டமா இருக்கு தமிழ் ல டைப் பண்றது),பாஸ்கர்,வையாபுரி னு லிஸ்ட் போட முடியாத அளவுக்கு பெரிய பட்டாளம். அவ்வளவும் குப்பையா பயன் படுத்தி இருக்கார் வாசு. சுத்த வேஸ்ட். இவளோ பேர் இருந்தும் சிரிப்புக்கு பதில் வெறுப்பு தான்.

4) திரைக்கதை: படம் முழுக்க ரஜினிய துரத்துரதே மொத்த கிராமமும் வேலையா பண்றாங்க. இதுல இவங்க அடிக்கற மொக்கை வேற. ரஜினி ரஜினி யா வாரார் னு தான் பேரு. உண்மைதான். எல்லாருக்கும் எட்டா கனி. ஜப்பான் காரங்கல சேர் போட்டு பேசுற தலைவர்.. விடிய விடிய வெளிய கத்துர குரவர்கள காலைல எழுந்து நிதானமா பாக்கறார். இதெல்லாம் கொஞ்ச ஓவரா இல்ல. இதனால அந்த குறவர்கள் இனமே பெருமை படுமாம்.. ஏன்யா இப்படி மக்கள(ரஜினி வெரியர்கள) முட்டாள் ஆக்கறீங்க.

இதுக்கும் மேல திரைக்கதை பத்தி சொல்றது கு ஒண்ணும் இல்ல. ஓட்டைய சுத்தி ஒரு பெரிய கப்பல் கட்டி இருக்காங்க. அவலோதான். ரஜினி காக பெத்த புள்ளைங்க அப்பா பேச்ச கேக்காம இருக்கறது கொஞ்சம் ஓவரா இல்ல. இதுல பொண்டாட்டி வேற.

5) ரஜினி: இனிமே வாழ வைத்த தமிழ் மக்களே னு சொல்லாதீங்க. ரசிகர்களே னு சொன்னவே போதும். படம் ஃபுல்லா நம்மள வீணா ஏத்தி விடராங்களே, அப்படினு கொஞ்சமாவது தர்ம சங்கடம் உங்களுக்கு இருந்ததா? இல்ல 25% மட்டும் தான் நான் னு சொல்லிட்டு 25 மிநிட்ஸ் தவிர எல்லா ஃப்ரேம் லயும் வறீங்களே அதுவாவது ஏன்னு உங்களுக்கு தோணுட்சா? தப்பில்லை உங்க படம் தான். அதுக்கு ப்ரெஸ் மீட் ல யெ ஃபுல் படம் நான்தான் னு சொல்லி இருக்கலாம். பாவம் வெறியர்கள் எத்தன பேரு இதுக்காக வருத்த பட்டிருப்பாக. யோசிங்க ஸார். அவசர பட்டு பேசாதீங்க.

நம்ம ஊருல dolphins இருக்கானே இந்த குசேலன் பாத்து தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த ஊரு ஏறி ல dolphin குதிக்கறது எல்லாம் ரொம்ப ங்க. ரஜினியதான் வெறியர்கள் ஏதுப்பாங்க. அதுக்காக அவங்க பொன்னையும் ஏதுப்பங்களா? ப்ரீயா விடுவோம்..

6) வடிவேலு: 25% வடிவேலு னு இருந்த கொஞ்ச கண்ணியமும் அந்த 25% ல நல்லா கெடுத்துகிட்டார்.

பசுபதி: 50% னு சொன்னாங்க. அத காப்பாத்திகிட்டார். ஆனா மீதி 50% மொக்கை நால இவர் ரொம்ப உழைத்தும் பயன் இல்ல.

8) கதை: சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.


மொத்ததுல, ஃப்ரீ யா DVD கிடைச்சா பாருங்கப்பு. அவலோதான் சொல்லிப்புட்டேன். அப்பறம் உங்க விருப்பம்.


பின் குறிப்பு: தன்னோட வயசு தெரிஞ்சதும் சிவாஜி, அமிதாப் னு நடிகர்கள் அவங்க வயதுக்கு ஏத்த கதா பாத்திரங்கல செஞ்சாங்க. அதையும் மக்கள் ரசிட்சாங்க. இத எல்லாரும் உணரனும்.

4 comments:

said...

//தன்னோட வயசு தெரிஞ்சதும் சிவாஜி, அமிதாப் னு நடிகர்கள் அவங்க வயதுக்கு ஏத்த கதா பாத்திரங்கல செஞ்சாங்க. அதையும் மக்கள் ரசிட்சாங்க. இத எல்லாரும் உணரனும். //

Appadiye valimoligiren.

said...

விமர்சனத்துக்கு நன்றி ரவிகுமார்.

இந்த படத்துக்கு வர பதிவுகள பாத்தா நெறைய பேரு பாதிக்க பட்டிருக்காங்க போல...

Anonymous said...

நம்ம ஊருல dolphins இருக்கானே இந்த குசேலன் பாத்து தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த ஊரு ஏறி ல dolphin குதிக்கறது எல்லாம் ரொம்ப ங்க. ரஜினியதான் வெறியர்கள் ஏதுப்பாங்க. அதுக்காக அவங்க பொன்னையும் ஏதுப்பங்களா? ப்ரீயா விடுவோம்..
romba ravuna arunthurum mudiyala'?

said...

வருகைக்கு நன்றி முமு..