கதிரவனும் வந்தான்…
அவன் முகத்தில் பயண களைப்பையும் மீறி பிரகாசமாய் ஒளிர துவங்கிய தருணம் அது. ஆம் பால் வாங்க பிறை எங்கள் வீட்டை கடக்கும் தருணம் அது. ஆனால் அவளை கதிரவன் இன்று பார்ப்பதை நான் விரும்ப வில்லை. இன்று என்ன என்றுமே. எப்படி சொல்வது அவனிடம். வாய் மட்டுமல்ல இமைகளும் அடைத்த படி அவன் முன் நின்றிருந்தேன்.
அவன் என்னை உணரவில்லை. என்னை வழக்கமாய் பார்ப்பது போல் கவனித்துவிட்டு அவளுக்காக தயார் ஆனான். அவள் வரும் தருணம் வந்தது. எப்படி சொல்வேன் இவனிடம். இதனால் வரும் விளைவுகள் என்ன. இவன் துன்புற்றால் இவனது உற்றார் நெஞ்சம் தாங்குமோ?. அவளை கண்டால் எங்கள் நெஞ்சம் தாங்குமோ?
இமை அடைத்து நின்றேன். அருகில் வந்தவன் என் விழி திறக்க ஆயத்த மானான். பிறை வீட்டின் அருகில் வருவதை என்னால் உணர முடிந்தது. பிறையின் வரவு இன்று மேள தாளங்களுடன் மிக விமார்சையாக. வான வேடிக்கைகளின் பிரகாசம் என் விழி வாயிலில் பிரகாசித்தது. என் இமைகளை திறந்து என் வழியே அவளை கண்டான். அங்கேய் பிறை மலர் சூடிய நிலவாய்…மண மகளாய்… மண பிறையாய்….
கதிரவனின் கண்கள் கண்ட காட்சியில் இமை விலகாமல் ஒளி குறையாமல், நீர் மட்டும் பனித்துளியாய், வெப்ப ஆறாய் ஓட துவங்கியது. நான் என்ன செய்ய. நீர் துடைக்க கரம் இன்றி, விழி மட்டும் கொண்ட ஒரு ஜன்னலாய் இறைவன் என படைத்து விட்டானே. என் நம்பனின் கண்ணீர் என் முன்னே கரைந்து ஓடிய தினமே, நான் விழி மூடிய இறுதி நாள் ஆனது. அன்று முதல் ஒளி படரா அறையில் அவளின் நினவுகளுடன் அவனும் விழி மூடிய பாடி நானும்.
Monday, August 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment