வழக்கம் போல் இன்றும் என் வேலை தொடங்கியது. எனது வேலை மிக அத்தியாவசியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் எனது பணி மிக அத்தியாவசியம். அதனால் என் வேலை எப்பொழுதும் இருக்கும். 24 மணி நேரம் வேலை பலு நிறைந்திருக்கும் ஒரு துறை. எனது நண்பர்கள் 8 மணி நேரம் வேலை செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் சமயங்களில் என்னை கண்டு செல்வதுண்டு. என் வேலை மனித வாழ்வில் ஒரு அங்காமாவாதால் அவர்களின் பார்வை எனக்கு ஏளனமாகத் தெரியவில்லை. மாறாக எனக்கு பெருமிதத்தை தந்தது.
என் உழைப்பின்றி எந்த ஒரு மனிதனும் அவர்கள் வீட்டில் இருப்பது கொஞ்சம் சிரம்மமே. என் உழைப்பைச் சாராது எந்த ஒரு மனிதனும் இருந்ததில்லை. அப்படி என்ன வேலை செய்கிறாய் என்று நீங்கள் கேக்கலாம். சொல்கிறேன். அதற்கு முன் கேளுங்கள் என் வழி கண்ட காதல் கதையை.
கதிரவன் என்னுடன் வாழ்பவன். அவன் குடும்பமும் என்னுடன் வாழ்ந்து வருகிறார்கள். என் வீடாக இருந்தாலும் அது அவர்கள் வீடாக எண்ணி வாழும் குடும்பம். என் மேல் எப்பொழுதும் ஒரு தனி அக்கறை. ஏனெனில் அவர்களின் பார்வை என் வழி கண்டதே.
பிறை எங்கள் வீட்டின் அருகாமையில் வாழும் ஒரு தேவதை. அவள் வீதியில் வர ஊரே தேர் உலா கண்டு மகிழும் அழகுடையவள். ஆயிரம் மல்லிகை மலர்கள் ஒன்று கூடி கட்டிய ஒரு வசந்த வானவில். ஆவலுடன் பேச தவம் கிடந்தவர் பலர். கதிரவனும் தான்.
கதிரவனுக்கு எப்பொழுதும் அவள் மேல் ஒரு தனி பிரியம். அவளுடன் இன்று வரை ஏதும் பேசியது இல்லை என்றாலும் அவள் தன்னை காதலிப்பதாய் எண்ணி மகிழ்வான். பேசலாம் என்று நினைத்தபோதும் அவளின் பார்வை அவனை ஊமை மொழி மட்டுமே உரைக்க செய்யும். அவளும் ஒன்றும் குறைந்தவள் இல்லை. யார் பார்த்தாலும் தலை நிமிரா வண்ண மயில் இவனை கண்டால் மட்டும் புன்னகை தோகை விரிப்பாள். புன்னகைத்த கணத்தில் என் கண்பட இவன் துடித்த கணங்கள் பல.
காதல் அவன் மனதில் சுடர்விட பூக்களாய் அவன் மலர துவங்கிய காலம் அது .ஆம் வசந்த காலம் போல் அது அவனுடைய காதல் காலம். யாரும் அறியா கனவு காலம்.
என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அறையில் நான் தான் சிறந்தவன். எத்தனை நண்பர்கள் என் போன்று இருந்தாலும் எனக்கென அவன் இதயத்தில் எப்பொழுதும் தனி இடம். அவனுடைய கவிதைகள், கதைகள் அத்தனையிலும் நான் அடக்கம் ஒரு நண்பனாய். அவன் காதல் உணர்வுகளின் ஒளியை பலமுறை என்னுடன் பகிர்ந்து இருக்கிறான். அன்றே முடிவு கொண்டேன், என்றேனும் இவனுக்கு தூதாய் நாம் என்று. வருத்தம் இல்லை மாறா குளிர்ந்த புன்னகை.
ஒரு வாரம் கதிரவன் வெளியூர் செல்ல வேண்டிய நிலை. உயிர் நண்பனை பிரியும் சோகம் என்னுள். பிறையை பிரியும் சோகம் அவனுள். நாட்கள் 6 ஆயிற்று. எப்படியும் அவளிடம் பேசி கதிரவனுடன் பேச வைக்க வேண்டும் என்று எண்ணினேன். மாலை சந்திக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். சாலையை நோக்கி காத்திருந்தேன். அவள் என்னை கடக்கும் தருணம் வந்தது.
தூரத்தில் கண்ட பிறை நிலவின் ஒளியாய் காட்சி தந்தாள். பிரகாசம் கண்ணை கூசினாலும் விழி மூடாமல் அவளை பார்க்க வைத்தது. நானும் மௌனம் ஆனேன். என்னைப் பார்த்து கண் சிமிட்டி சென்றாள். எது எப்படியோ அவள் கதிரவனுக்கு நல்ல துணை என்று அறிந்தேன். என்ன செய்ய. நான் வாய் திறப்பதற்குள் அவள் வீட்டு வாயிலை அடைந்தாள். மறுநாள் அவள் நிச்சயம் என்னை பார்ப்பாள். கதிரவனுடன் சந்திக்கலாம் என்று காத்திருந்தேன். மறுநாளும் வந்தது.. கதிரவனின் வரவால்.
தொடரும்...
Monday, July 21, 2008
Friday, July 18, 2008
இப்பவே கண்ண கட்டுது...
உறுப்படியா இன்னும் ஒரு பதிவு கூட போடல... ஆனா என்னையும் மதிச்சி 100 ஹிட் என் ப்லாகுக்கு கெடசிருக்கு... நல்லா இருக்குய்யா நல்லா இருக்கு.. இதயல்லாம் நெனச்சு மனசு சந்தோசப் பட்டாலும் உள்ள ஏதோ ஒரு சோகம் உருண்டு கிட்டு கெடக்கு... அது என்னானு கேக்குறீங்களா... சொல்றேன்.. அதுக்குள்ள அவசரம்...
நானும் எழுத போறேணு ஆரம்பிச்சி ஏதேதோ எழுத ஆரம்பிச்சேன்... என்ணயும் மதிச்சி அண்ணன் KD இல்ல இல்ல DK ஒரு பின்னூட்டம் வேற போட்டுட்டாரு... அதுக்கு பயந்தாவது ஒழுங்கா எழுதணும் னு யோசிச்சா ஒண்ணும் சிக்க மாட்டேங்குது... கூகல் ல தேடலாம் ணாலும் மனசு எடம் குடுக்க மாட்டேங்குது...
அதனால ப்லாக் எழுதுரெத முழு நேர வேலையா ஆக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்... முழு நேரம் உக்காந்தா மட்டும் தோனவா போகுது னு என் வீட்டுக்கார அம்மா கேக்கறது கொஞ்சம் நக்கலா இருந்தாலும்... வேற வழி இல்ல.. எனக்கும் பொழுது போகணும் இல்லயா...
அதனால கண்டிப்பா இன்னும் அதிகமா எழுதுவேன்... யாருப்பா அங்க அலறது. ஓய் என்னா அழுகாக்சு... அழ பிடாது...
நீங்க பாட்டுக்கு படிங்க நான் பாட்டுக்கு எழுதறேன்... என்ன நான் சொல்றது... வரட்டுமா...
நானும் எழுத போறேணு ஆரம்பிச்சி ஏதேதோ எழுத ஆரம்பிச்சேன்... என்ணயும் மதிச்சி அண்ணன் KD இல்ல இல்ல DK ஒரு பின்னூட்டம் வேற போட்டுட்டாரு... அதுக்கு பயந்தாவது ஒழுங்கா எழுதணும் னு யோசிச்சா ஒண்ணும் சிக்க மாட்டேங்குது... கூகல் ல தேடலாம் ணாலும் மனசு எடம் குடுக்க மாட்டேங்குது...
அதனால ப்லாக் எழுதுரெத முழு நேர வேலையா ஆக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்... முழு நேரம் உக்காந்தா மட்டும் தோனவா போகுது னு என் வீட்டுக்கார அம்மா கேக்கறது கொஞ்சம் நக்கலா இருந்தாலும்... வேற வழி இல்ல.. எனக்கும் பொழுது போகணும் இல்லயா...
அதனால கண்டிப்பா இன்னும் அதிகமா எழுதுவேன்... யாருப்பா அங்க அலறது. ஓய் என்னா அழுகாக்சு... அழ பிடாது...
நீங்க பாட்டுக்கு படிங்க நான் பாட்டுக்கு எழுதறேன்... என்ன நான் சொல்றது... வரட்டுமா...
Wednesday, July 16, 2008
ஒரு காலடியின் கனவு...

நீ நடக்கும்
ஒவ்வொரு அடியிலும்
நான் உன்னை தொடர்கிறேன்..
என்றேனும்
உன் முகம் காண்பேன் என..
பிறை தேடும்
கதிரவன் போல்...
Monday, July 7, 2008
மகன்
3 மாதங்களுக்கு முன்...
இடம்: சென்னை, தனியார் தொழில்நுட்ப நிறுவனம்
காலை 9 மணிஅலுவலகத்தில் வேகமாய் நுழைந்து அவன் இருக்கை வந்து அமர்ந்தான் அகிலன். அமெரிக்கா வில் இருந்த வேலை நிமித்தமாக வந்த மைல் களைபடித்து முடித்து வேலைக்கு தாயார் ஆனான். அகிலன் தென்காசி அருகெய் உள்ள அந்தியூர் ரை சார்ந்தவன். சென்னை வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஏழை குடும்பத்தில் பிறந்து இன்ஜினீரிங் படித்து இன்று இந்த நிறுவனத்தில் மாதம் 10000 ரூபாய் வேலை. இவன் குடும்பம் ஒரு வழியாக ஏழை கரையை தாண்டும் நிலை.
காலை 9:30: அதே இடம்
அவனுடைய ப்ராஜெக்ட் லீட் அவரது அறைக்கு அவனை வர சொன்னார். "அகிலா, நம்ம ப்ராஜெக்ட் கு அமெரிக்காக்கு போய் ஒருத்தர் வேலை செய்யணும். இப்ப நம்ம ப்ராஜெக்ட் ல நீதான் கொஞ்சம் நாலெஜ் உள்ள ஆளா இருக்க...ஸொ, நீ இந்த வேலைக்கு அமெரிக்கா போன நல்ல இருக்கும் னு நான் நினைக்கறேன். உனக்கு போக விருப்பமா?" என்றார் மதன். அகிலன் னுக்கு ஒரே ஆச்சரியம். சந்தோஷமும் கூட.
"ஒரு 5 மிநிட்ஸ் ஸார்" என்று சொல்லி விட்டு உடனடியாய் தன்னிடத்துக்கு வந்தான். தொலைபேசி மூலம் தான் கிராம பண்ணையார் வீட்டிற்கு போன் செய்தான். "அய்யா நான் அகிலன் பேசுறேன். எங்க அய்யா அங்க இருக்காரா? இருந்த கொஞ்சம் பேச சொல்றீங்களா" என்று பண்ணையாரிடம் பணிவாய் கோரினான். "இரு அகிலா தரேன்" என்று தோட்ட வேலை செய்து கொண்டிருந்த முருகனை அழைத்தார்... "டே முருகா!!உன் பையன் போன் பண்ணி இருகந்..சீக்கிரம் வா" என்றார்...
குரல் கேட்டதும் முருகன் தடுமாறி தொலைபேசி நோக்கி ஓடினார். "என்னவெய் அகிலா. நல்ல இருக்கியா...என்ன திடீர்னு போனு... உடம்பு சரி இல்லையா கண்ணு" என்று கேள்வி மேல் கேள்வியாய் கவன கூற்றுகளை தொடுத்தார்... "அதெல்லாம் இல்லயா. நான் நல்ல இருக்கேன். என் ஆஃபீஸ் ல என அமெரிக்கா போக சொல்லி இருக்காங்க. அதாம்பா உடனே உனக்கு போன் செஞ்சேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா... இனிமே நாம யாரும் கஷ்ட பட வேணாம். யப்பா எங்க மேனேஜேர் கூபிடரார். நான் போய் அமெரிக்கா போகறேனு சொல்றேன் பா. சாயங்காலம் மா போன் பண்ணுறேன்" என்று கூறி மேனேஜேர் அரை நோக்கி விரைந்தான்.(போனை துண்டித்து விட்டுதான் :) )
முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னலேய் முருகா. என்னலே விசயம்" என்றார் பண்ணையார். "அய்யா அகிலான வெளியூர் போக சொல்றாங்களாம்" என்றார். "வெளியூர் நா எங்கடா?" என்று மறுபடியும் பண்ணையார் கேட்க "எங்கயோ மெரிக்கா னு சொன்னான். புரியலைங்கய்யா" என்றார் முருகன். "அது மெரிக்கா இல்லடா அமெரிக்கா. உன் பையன் கடல் கடந்து போக போறான். இனிமே உன் குடும்பம் கூலி வேல செய்ய தேவையில்ல." என்றார் பண்ணையார்.... ஒன்றும் விளங்கா விட்டாலும் புன்னகைத்தார் முருகன்.
2 நாட்கள் கழித்து...
இடம்:சென்னை விமான நிலையம்
"கண்ணு... ரொம்ப தூரம் போவ போற. உடம்ப பாத்துக்கு ராசா. தெனத்துக்கு போன் பண்ணு. உடம்ப பாத்துக்கோ" என்று கண்ணீருடன் கூறினார் அகிலனின் தாய். அகிலணும் அம்மா அப்பா வாய் பிரிய முடியாமல் கண்ணீர் சிந்தினான். "சீக்கிரம் வந்துடறேன் அய்யா" என்று கூறி விமான நிலையத்தின் உள் சென்றான். முருகனும் வள்ளியும் உயிர் தங்களை விட்டு விமானம் நோக்கி செல்ல கண்ணீரால் வழி அனுப்பினர்...
இன்று... இடம் : ந்யூ யார்க்
"Akilan your performance had really helped us to clear this project as a defect free one.If you wish you can continue as an employee here. You can earn millions. உன் விருப்பத்தை சொல்லு" என்றார் மேலாளர். அகிலன் இதை எதிர்பார்க்க வில்லை.
"ஸார். என் குடும்பத் விட்டு 3 மாசம் பிரிஞ்சதே ரொம்ப கொடுமையானது. இந்தியா விட்டு வந்த ஒவ்வொரு நொடியும் எப்ப திரும்பி அவங்கள சந்திப்பேனு தான் நினச்சிட்டு இருக்கேன். என்ன பிரிஞ்சி என் அப்பா அம்மா தவிச்சிட்டு இருப்பாங்க. பணம் என் வாழ்க்கையில எப்ப வேனாளும் சம்பாதிக்கலாம். ஆனா என்ன பெட்தவங்கக்கூட நான் செலவு பண்ற ஒவ்வொரு நிமிஷமும் விலை மதிக்க முடியாதது. எனக்கு இங்க இருக்க விருப்பம் இல்ல ஸார்." என்று சற்றும் தயங்காமல் அகிலன் கூறினான். "அகிலா.. உன் வாழ்க்கையில உனக்கு கெடைக்கர பெரிய வாய்ப்பு இது. தவிர்க்காத" என்றார் மேலாளர். ஸார். இங்க நான் சம்பாதிக்கறது எல்லாம் என் குடும்பத்துக்கு தான். ஆனா இங்க இருக்கற ஒவ்வொரு நொடியும் என் தாய் தந்தையோட இருக்கற நேரங்கல நான் இழக்கறேன். நான் அவங்க கூட இருக்க ஆச படரேன் ஸார். என்ன இந்தியா அனுப்ப முடியுமா ஸார் உங்களால?" என்று கண்ணீர் பெருக கோரினான் அகிலன்.
குறள் 0001
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு
இடம்: சென்னை, தனியார் தொழில்நுட்ப நிறுவனம்
காலை 9 மணிஅலுவலகத்தில் வேகமாய் நுழைந்து அவன் இருக்கை வந்து அமர்ந்தான் அகிலன். அமெரிக்கா வில் இருந்த வேலை நிமித்தமாக வந்த மைல் களைபடித்து முடித்து வேலைக்கு தாயார் ஆனான். அகிலன் தென்காசி அருகெய் உள்ள அந்தியூர் ரை சார்ந்தவன். சென்னை வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஏழை குடும்பத்தில் பிறந்து இன்ஜினீரிங் படித்து இன்று இந்த நிறுவனத்தில் மாதம் 10000 ரூபாய் வேலை. இவன் குடும்பம் ஒரு வழியாக ஏழை கரையை தாண்டும் நிலை.
காலை 9:30: அதே இடம்
அவனுடைய ப்ராஜெக்ட் லீட் அவரது அறைக்கு அவனை வர சொன்னார். "அகிலா, நம்ம ப்ராஜெக்ட் கு அமெரிக்காக்கு போய் ஒருத்தர் வேலை செய்யணும். இப்ப நம்ம ப்ராஜெக்ட் ல நீதான் கொஞ்சம் நாலெஜ் உள்ள ஆளா இருக்க...ஸொ, நீ இந்த வேலைக்கு அமெரிக்கா போன நல்ல இருக்கும் னு நான் நினைக்கறேன். உனக்கு போக விருப்பமா?" என்றார் மதன். அகிலன் னுக்கு ஒரே ஆச்சரியம். சந்தோஷமும் கூட.
"ஒரு 5 மிநிட்ஸ் ஸார்" என்று சொல்லி விட்டு உடனடியாய் தன்னிடத்துக்கு வந்தான். தொலைபேசி மூலம் தான் கிராம பண்ணையார் வீட்டிற்கு போன் செய்தான். "அய்யா நான் அகிலன் பேசுறேன். எங்க அய்யா அங்க இருக்காரா? இருந்த கொஞ்சம் பேச சொல்றீங்களா" என்று பண்ணையாரிடம் பணிவாய் கோரினான். "இரு அகிலா தரேன்" என்று தோட்ட வேலை செய்து கொண்டிருந்த முருகனை அழைத்தார்... "டே முருகா!!உன் பையன் போன் பண்ணி இருகந்..சீக்கிரம் வா" என்றார்...
குரல் கேட்டதும் முருகன் தடுமாறி தொலைபேசி நோக்கி ஓடினார். "என்னவெய் அகிலா. நல்ல இருக்கியா...என்ன திடீர்னு போனு... உடம்பு சரி இல்லையா கண்ணு" என்று கேள்வி மேல் கேள்வியாய் கவன கூற்றுகளை தொடுத்தார்... "அதெல்லாம் இல்லயா. நான் நல்ல இருக்கேன். என் ஆஃபீஸ் ல என அமெரிக்கா போக சொல்லி இருக்காங்க. அதாம்பா உடனே உனக்கு போன் செஞ்சேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா... இனிமே நாம யாரும் கஷ்ட பட வேணாம். யப்பா எங்க மேனேஜேர் கூபிடரார். நான் போய் அமெரிக்கா போகறேனு சொல்றேன் பா. சாயங்காலம் மா போன் பண்ணுறேன்" என்று கூறி மேனேஜேர் அரை நோக்கி விரைந்தான்.(போனை துண்டித்து விட்டுதான் :) )
முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னலேய் முருகா. என்னலே விசயம்" என்றார் பண்ணையார். "அய்யா அகிலான வெளியூர் போக சொல்றாங்களாம்" என்றார். "வெளியூர் நா எங்கடா?" என்று மறுபடியும் பண்ணையார் கேட்க "எங்கயோ மெரிக்கா னு சொன்னான். புரியலைங்கய்யா" என்றார் முருகன். "அது மெரிக்கா இல்லடா அமெரிக்கா. உன் பையன் கடல் கடந்து போக போறான். இனிமே உன் குடும்பம் கூலி வேல செய்ய தேவையில்ல." என்றார் பண்ணையார்.... ஒன்றும் விளங்கா விட்டாலும் புன்னகைத்தார் முருகன்.
2 நாட்கள் கழித்து...
இடம்:சென்னை விமான நிலையம்
"கண்ணு... ரொம்ப தூரம் போவ போற. உடம்ப பாத்துக்கு ராசா. தெனத்துக்கு போன் பண்ணு. உடம்ப பாத்துக்கோ" என்று கண்ணீருடன் கூறினார் அகிலனின் தாய். அகிலணும் அம்மா அப்பா வாய் பிரிய முடியாமல் கண்ணீர் சிந்தினான். "சீக்கிரம் வந்துடறேன் அய்யா" என்று கூறி விமான நிலையத்தின் உள் சென்றான். முருகனும் வள்ளியும் உயிர் தங்களை விட்டு விமானம் நோக்கி செல்ல கண்ணீரால் வழி அனுப்பினர்...
இன்று... இடம் : ந்யூ யார்க்
"Akilan your performance had really helped us to clear this project as a defect free one.If you wish you can continue as an employee here. You can earn millions. உன் விருப்பத்தை சொல்லு" என்றார் மேலாளர். அகிலன் இதை எதிர்பார்க்க வில்லை.
"ஸார். என் குடும்பத் விட்டு 3 மாசம் பிரிஞ்சதே ரொம்ப கொடுமையானது. இந்தியா விட்டு வந்த ஒவ்வொரு நொடியும் எப்ப திரும்பி அவங்கள சந்திப்பேனு தான் நினச்சிட்டு இருக்கேன். என்ன பிரிஞ்சி என் அப்பா அம்மா தவிச்சிட்டு இருப்பாங்க. பணம் என் வாழ்க்கையில எப்ப வேனாளும் சம்பாதிக்கலாம். ஆனா என்ன பெட்தவங்கக்கூட நான் செலவு பண்ற ஒவ்வொரு நிமிஷமும் விலை மதிக்க முடியாதது. எனக்கு இங்க இருக்க விருப்பம் இல்ல ஸார்." என்று சற்றும் தயங்காமல் அகிலன் கூறினான். "அகிலா.. உன் வாழ்க்கையில உனக்கு கெடைக்கர பெரிய வாய்ப்பு இது. தவிர்க்காத" என்றார் மேலாளர். ஸார். இங்க நான் சம்பாதிக்கறது எல்லாம் என் குடும்பத்துக்கு தான். ஆனா இங்க இருக்கற ஒவ்வொரு நொடியும் என் தாய் தந்தையோட இருக்கற நேரங்கல நான் இழக்கறேன். நான் அவங்க கூட இருக்க ஆச படரேன் ஸார். என்ன இந்தியா அனுப்ப முடியுமா ஸார் உங்களால?" என்று கண்ணீர் பெருக கோரினான் அகிலன்.
குறள் 0001
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு
Saturday, July 5, 2008
மேகம்

இதயம் இன்றி
வாழ இயலாது.
உரைத்தவன் மூடன்!!!
பத்தடி தூரத்தில்
என் இதயம்
சுடிதார் மேகமாய்
நகர்வதை
அவன் அறியான்!!
Friday, July 4, 2008
Thursday, July 3, 2008
இவனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்....!!!!
ப்ராஜெக்ட் ரிலீஸ் முடிஞ்சி ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள வெட்டி ஆபீசர் ஆகிட்டேன். சும்மா இருக்கறது எவளோ பெரிய கஷ்டம். அதுக்கு வளந்த புல்ல புடுங்கலாம். அடுத்த ரெண்டு மாசம் என்னா பண்ணாலாம்னு ப்லாக் பக்கம் போனா!!! அடங்கோய்யாலே...!நம்ம மக்கா எதெ எதெயோ எழுதி வச்சிருக்காங்க.
அடுத்தவங்க படிக்காறங்களா இல்லயானு கொஞ்சம் கூட கவலை இல்ல. இதுக்கெல்லாம் "WHAT IS THE REASON" னு ப்ராஜெக்ட் லீட் எஸ்கேப் ஆன நேரமா பாத்து உக்காந்து யோசிச்சேன். அப்பதான் விடை சிக்குனுச்சு.
என்னானு கேக்கறீங்களா?பல பேருக்கு பல விசயம் தெரியாது. எனக்கோ பல விசயம் புரியாது. புரிஞ்சிக்கலாம்னு தான் பாப்பேன். ஆனா நமக்கு தான் அது என்னனு தெரியாதே. அதனால மண்டி போட்டு உக்காந்து, இனிமே நேரம் கெடைக்கறப்ப தெரிஞ்சி புரிஞ்சி உங்க கிட்டயும் சொல்லலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.என்னானு கேட்டதுக்கு இவளோ பெரிய இம்சையா னு நீங்க கேக்கலாம்.சும்மா இருக்கரோமில்ல......சொல்லுவோமில்ல....இந்த பதிவு மூலமா நானும் எழுத ஆரம்பிச்சிட்டென். விட மாட்டேன்.
என்னோட பதிவை படிச்சிட்டு உடம்போ மனசோ கெட்டு போச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சும்மா இருக்கறது நான்தான்.பதிவை எழுதரதுக்கு நான் எவளோ கஷ்ட படரேன். படிக்க நீங்க கொஞ்சம் சிரமப்பட்டா என்ன? அழ கூடாது? என்ன நான் சொல்றது. வரட்டா?
அடுத்தவங்க படிக்காறங்களா இல்லயானு கொஞ்சம் கூட கவலை இல்ல. இதுக்கெல்லாம் "WHAT IS THE REASON" னு ப்ராஜெக்ட் லீட் எஸ்கேப் ஆன நேரமா பாத்து உக்காந்து யோசிச்சேன். அப்பதான் விடை சிக்குனுச்சு.
என்னானு கேக்கறீங்களா?பல பேருக்கு பல விசயம் தெரியாது. எனக்கோ பல விசயம் புரியாது. புரிஞ்சிக்கலாம்னு தான் பாப்பேன். ஆனா நமக்கு தான் அது என்னனு தெரியாதே. அதனால மண்டி போட்டு உக்காந்து, இனிமே நேரம் கெடைக்கறப்ப தெரிஞ்சி புரிஞ்சி உங்க கிட்டயும் சொல்லலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.என்னானு கேட்டதுக்கு இவளோ பெரிய இம்சையா னு நீங்க கேக்கலாம்.சும்மா இருக்கரோமில்ல......சொல்லுவோமில்ல....இந்த பதிவு மூலமா நானும் எழுத ஆரம்பிச்சிட்டென். விட மாட்டேன்.
என்னோட பதிவை படிச்சிட்டு உடம்போ மனசோ கெட்டு போச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சும்மா இருக்கறது நான்தான்.பதிவை எழுதரதுக்கு நான் எவளோ கஷ்ட படரேன். படிக்க நீங்க கொஞ்சம் சிரமப்பட்டா என்ன? அழ கூடாது? என்ன நான் சொல்றது. வரட்டா?
Subscribe to:
Comments (Atom)
