Thursday, July 3, 2008

இவனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்....!!!!

ப்ராஜெக்ட் ரிலீஸ் முடிஞ்சி ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள வெட்டி ஆபீசர் ஆகிட்டேன். சும்மா இருக்கறது எவளோ பெரிய கஷ்டம். அதுக்கு வளந்த புல்ல புடுங்கலாம். அடுத்த ரெண்டு மாசம் என்னா பண்ணாலாம்னு ப்லாக் பக்கம் போனா!!! அடங்கோய்யாலே...!நம்ம மக்கா எதெ எதெயோ எழுதி வச்சிருக்காங்க.

அடுத்தவங்க படிக்காறங்களா இல்லயானு கொஞ்சம் கூட கவலை இல்ல. இதுக்கெல்லாம் "WHAT IS THE REASON" னு ப்ராஜெக்ட் லீட் எஸ்கேப் ஆன நேரமா பாத்து உக்காந்து யோசிச்சேன். அப்பதான் விடை சிக்குனுச்சு.

என்னானு கேக்கறீங்களா?பல பேருக்கு பல விசயம் தெரியாது. எனக்கோ பல விசயம் புரியாது. புரிஞ்சிக்கலாம்னு தான் பாப்பேன். ஆனா நமக்கு தான் அது என்னனு தெரியாதே. அதனால மண்டி போட்டு உக்காந்து, இனிமே நேரம் கெடைக்கறப்ப தெரிஞ்சி புரிஞ்சி உங்க கிட்டயும் சொல்லலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.என்னானு கேட்டதுக்கு இவளோ பெரிய இம்சையா னு நீங்க கேக்கலாம்.சும்மா இருக்கரோமில்ல......சொல்லுவோமில்ல....இந்த பதிவு மூலமா நானும் எழுத ஆரம்பிச்சிட்டென். விட மாட்டேன்.

என்னோட பதிவை படிச்சிட்டு உடம்போ மனசோ கெட்டு போச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. சும்மா இருக்கறது நான்தான்.பதிவை எழுதரதுக்கு நான் எவளோ கஷ்ட படரேன். படிக்க நீங்க கொஞ்சம் சிரமப்பட்டா என்ன? அழ கூடாது? என்ன நான் சொல்றது. வரட்டா?