Monday, November 3, 2008

வந்துட்டான் யா வந்துட்டான் யா....!

அக்டோபர் 11 2008, என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள். என்ன னு கேக்குறீங்களா..? சொல்றேன்.. தேதி சொன்ன உடனே அவசரம். தேதி சொன்னவனுக்கு மீதி சொல்ல தெரியாதா?

அன்னைக்குதான், 24 வயசு ஆனாலும் மனசலவுக்கு சின்ன புள்ளையா இருக்கற இந்த கோப்பிக்கு இன்னொரு சின்ன பையன் பிறந்த நாள். ஹே நான் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன்.

காலைல 7 மணிக்கு ஹாஸ்பிடல் போய், மணி 2:27 PM ஆச்சு குழந்தை பிறக்க. ஆனாலும் நம்ம ஊரு பசங்க ரொம்ப மோசம் பா. கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அன்னிக்கி இருந்து, குழந்தை பொறந்தா citizen na குழந்தை பொறந்தா citizen na னு கேள்வி கேட்டு ஒரே இம்சை பா. Citizenship என்னோட டார்கெட் இல்லப்பா னு சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாங்க. அத விடுங்க இது வா முக்கியம்.

Back to the topic. ஒரு வழியா குழந்தை பொறந்தார். அப்படியே மூக்கும் முழியும் அப்பாவே. மூக்கும் முழியும் மட்டுமா. ஜாதகம் கூட. இது வரை ரெண்டு லூசுங்க லூசு தனமா பல வேலைகள் செஞ்சாலும் அது லூசுதனமா தெரியல. ஏன்னா லூசுங்க குள்ள இருந்த அலைவரிசை அப்படி. இப்ப அத கவனிக்க சிங்க குட்டி வந்துட்டான். விடுவமா நாங்க, terror family.

ஆண்டவா இந்த பச்ச புள்ளைய காப்பாத்து.

சொல்ல மறந்துட்டேனே பையன் பேரு ISHANTH.

5 comments:

said...

நல்வாழ்த்து(க்)கள் கோபி.

புள்ளாண்டானுக்கு ஆசிகளும், உங்க தங்கமணிக்கும் உங்களுக்கும் எங்கள் அன்பும் உரித்தாகுக.

said...

thulasi madam..ungaloda padhivugala nan regular padikaren.Good work.comments podadhadhukku manichidunga :)

said...

ungal vaalthukkalukku nanndri..

said...

vaalthukkal gopi
please remove word verification

said...

nandri Babu..

Word verification remove panniten :)