Friday, November 7, 2008

உண்ணாவிரதமும் சில தமாஷ்களும்...

உணர்வை காட்டுகிற உண்ணாவிரதம்தான். இதிலேயும் சில தமாஷ்கள் அரங்கேறின.விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?

ராதாரவியின் பேச்சில் விஜய் பேச்சை விடவும் தமாஷ். ஈழத் தமிழர்களை இலங்கைவாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டுமாம். அப்படி அழைத்தால் இந்தியா உதவும் என்றார். நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த திருமாவளவன், வரலாற்றை எடுத்துச் சொல்லி ராதாரவிக்கு புரிய வைத்தார். இலங்கையை பொறுத்தவரை வந்தேறிகள் என்பது சிங்களர்கள்தான். வேண்டுமென்றால் சிங்களவர்களை ‘இலங்கை வாழ் இந்தியர்கள்’ என்று அழைக்கலாம். ஏனென்றால், இந்திய அரசு அவர்களுக்குதான் மறைமுக உதவி செய்கிறது என்றார் காட்டமாக!

மெயில் ஃபார்வர்ட் ங்க இது.. எனக்கும் விஜய் க்கும் எந்த தனிப்பட்ட முன் விரோதமும் இல்லை.. குற்றம் குறை இருந்தால் மன்னியுங்கள்

0 comments: